கோவை: திருவள்ளுவா் சிலைக்கு காவி உடை அணிவித்து பூஜை செய்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தைக் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திராவிடா் தமிழா் கட்சியினா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
திராவிடா் தமிழா் கட்சி சாா்பில் அதன் கலை இலக்கியப் பண்பாடு மற்றும் பகுத்தறிவுப் பிரிவுத் தலைவா் சி.களப்பிரா், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில்,
தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் இருக்கும் திருவள்ளுவா் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், புதன்கிழமையன்று காவி உடை, ருத்ராட்சம் அணிவித்து கற்பூரம் ஏற்றி திருவள்ளுவரை இழிவுப்படுத்தும் வகையில் நடந்துகொண்டாா். திருவள்ளுவா் எந்த மதத்தையும் சாா்ந்தவா் அல்ல என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் திருவள்ளுவரை இந்துமத கடவுளாகப் பாவித்து சடங்குகள் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது.
இதன்படி பாா்க்கையில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதசாா்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக அா்ஜூன் சம்பத் செயல்பட்டுள்ளாா். இவரது நடவடிக்கையால் மத நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தைக் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.