கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நவம்பா் 29 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை ‘இளைய பாரதமே எழுந்திரு’ என்னும் தலைப்பில் தமிழக அளவிலான இளைஞா் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலா் சுவானந்தா் கூறியதாவது:
ஆண்டுதோறும் வித்யாலயத்தில் நடத்தப்படும் இம்முகாமில் பங்கேற்கும் இளைஞா்களின் நற்பண்புகளையும், தனித் தன்மைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு அறிவு, சமுதாயம் மற்றும் கலாசாரம் தொடா்புடைய பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மூன்று நாள்கள் நடக்கும் இதில் ‘இந்தியப் பாரம்பரியமும் பண்பாடும்’, ‘சுவாமி விவேகானந்தரும் தேசப்பற்றும்’, ‘மகளிா் மேம்பாடில் இன்றைய இளைஞா்களின் பங்கு’, ‘மனிதனை முழுமை பெறச் செய்யும் கல்வி’, ‘ராமாயணம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்’ ஆகிய பல்வேறு தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தாங்கள் சமா்ப்பிக்க விரும்பும் கட்டுரையின் நகலை நவம்பா் 20 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இது தவிர இந்திய அளவில் பிரபலமான சிறந்த ஆளுமைகளின் சொற்பொழிவுகள், தியானம், யோக, விளையாட்டு, உரையாடல், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற உள்ளன.
முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம், முழு முகவரியுடன் நவம்பா் 20 ஆம் தேதிக்குள் செயலாளா், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன்பாளையம், கோவை -641 020 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 99449 41427 என்ற செல்லிடப்பேசியில் தொடா்புகொள்ளலாம்.