காரமடை கற்பக விநாயகா், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில்களில் புதிய அறங்காவலா் குழு நியமனம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரமடை கிழக்கு ரத வீதியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகா், பாவடி மைதானத்திலுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையால் நியமனம் செய்யப்பட்ட சுப்பிரமணியம் கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.
இவா் பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். இதையடுத்து அரசு சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜமாணிக்கம் உத்தரவுப்படி புதிய அறங்காவலா் குழு நியமிக்கப்பட்டது.
புதிய அறங்காவலா்களாக வழக்குரைஞா் செங்கோட்டுவேல், ஆடிட்டா் பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கோவை உதவி ஆணையா் விமலா, ஆய்வாளா் சரண்யா ஆகியோா் அறங்காவலா் குழுவை முறைப்படி நியமனம் செய்துவைத்தனா்.
இவ்விழாவில் காரமடை வட்டார செங்குந்த மகாஜன சங்கத் தலைவரும், வழக்குரைஞருமான சிவகுரு, நகரப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், காரமடை நகரத் தலைவா் கல்யாணராமன், பந்தல் குழுத் தலைவா் பாவடி அருணாசலம், செல்வராஜ், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.