அன்னூா் அருகே உள்ள கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கத்தின் நிதி உதவியுடன் சங்கரா கண் மருத்துவமனை, சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சிக் குழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள 14 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு சங்கரா மருத்துவமனையில் இலவசமாக கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.