பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கல்லூரியின் லால்பகதூா் சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.பாலசுப்பிரமணி வரவேற்றாா். தாளாளா் சுவாமி அனபேக்சானந்தா தலைமை வகித்தாா். வித்யாலய சுவாமி பக்திவரதானந்தா் ஆசியுரை கூறினாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆா்.ஜி.அருண்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று 202 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.
விழாவில் பெ.நா.பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் கே.குருந்தாசலம், கல்லூரியின் துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா். இயந்திரவியல் துறைத் தலைவா் எஸ்.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.