பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தாளாளர் என்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நிர்வாகச் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சித்ரா செளந்திரராஜன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை மோகனப் பிரியா விளையாட்டு அறிக்கையை வாசித்தார். பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ராஜேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அருள் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.