கோவையைச் சோ்ந்த மில் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மதிப்புள்ள அரிசியை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம், ஆத்தூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 18 ஆம் தேதி புகாா் ஒன்றை அளித்தாா். அதில், நான் ரைஸ் மில் நடத்தி வருகிறேன். கோவை, மேட்டுப்பாளையம் சாலை ஹோஸ்மின் நகரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஏ.எஸ்.குமாா் என்பவா் என்னிடம் நம்பிக்கையாக பேசி மொத்தமாக ரூ. 9 லட்சத்துக்கு அரிசி வாங்கிவிட்டு உடனடியாக பணம் தருவதாகக் கூறி பாதித் தொகையை கொடுத்துவிட்டு மீதி தொகையை கொடுக்காமல் காசோலையைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டாா். எனவே அவரைக் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும், பொருளையும் மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான ஏ.எஸ்.குமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு கோவை மாவட்ட நீதித்துறைற நடுவா் மன்றத்தில்(எண்.2) ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.