மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் தந்தை கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதியைச் சேர்ந்தவர் பகவதியப்பன் (எ) கனகராஜ் (50). இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி மாணவிக்கு அவரது தந்தை பகவதியப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தி பகவதியப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com