மேட்டுப்பாளையம் அருகே ஆட்டோ பேட்டரியை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விக்னேஷ் குமார் (22). இவர் ஓடந்துறை மைதானம், மாரியம்மன் கோயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் பேட்டரியை ஞாயிற்றுக்கிழமை திருடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ உரிமையாளரான மதி, மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விக்னேஷ் குமாரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடமிருந்து பேட்டரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.