அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றம்

அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை 25 இடங்களில் கொடியேற்றப்பட்டன.

அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை 25 இடங்களில் கொடியேற்றப்பட்டன.
அன்னூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் என்.ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். 
மாவட்ட நிர்வாகக் குழு  உறுப்பினர் தங்கவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வஹாப் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலப் பொருளாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் கலந்து கொண்டு 25 இடங்களில் கொடியேற்றி வைத்து பேசியதாவது, அன்னூர் ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றம் அமைக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com