மேட்டுப்பாளையம் அருகே மருதூர் மற்றும் பவானிபேரேஜ் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கண்ணார்பாளையம், காளட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், குந்தா காலனி, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம். பி.கே.கோயில், என்.ஜி.புதூர், கெண்டேபாளையம், தொட்டதாசனூர், தேவனாபுரம்.