சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கே.பி.ஆர். கல்விக் குழுமம், கருமத்தம்பட்டி காவல் துறை ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கே.பி.ஆர். கல்விக் குழுமம், கருமத்தம்பட்டி காவல் துறை ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் சுங்கச் சாவடி அருகே நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியை கே.பி.ஆர். கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.பாலுசாமி, காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவ்வழியே இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தலைக்கவசம் அணியாத, சீட் பெல்ட் அணியாதவர்களுக்கும், பேருந்து ஓட்டுநர், கால் டாக்ஸி ஓட்டுநர் ஆகியோருக்கும் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கினர்.
 கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பொம்மன்னராஜா, மாணவர்கள் சாலை விதிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு தங்களையும், மற்றவர்களையும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க 
வேண்டும் என்றார். கல்லூரி நிர்வாக அலுவலர் அகிலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com