நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. உதவி தலைமையாசிரியை வி.பாக்கியவதி தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்நிலைப் பள்ளி செயலர் சுவாமி தமோஹரானந்தர் விழாவைத் துவக்கிவைத்து, சுவாமி விவேகானந்தர் கருத்துகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி - வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு சுவாமி தமோஹரானந்தர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் வித்யாலய உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார் எஸ்.வீரகுமார், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழாசிரியர் முனியாண்டி நன்றி கூறினார்.