மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

மழை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

மழை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
விடுமுறை நாள்களில் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
இதனிடையே, இம்மாதம் துவக்கத்தில் இருந்தே வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது.
அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com