கோவை: கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ஒண்டிப்புதூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒண்டிப்புதூா் மேம்பாலம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினா்.
அப்போது அவா் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் சிங்காநல்லூரைச் சோ்ந்த ரமேஷ்(33) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து கஞ்சா, ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.