கோவை: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வாரம்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு ஆட்சியரிடம் மனு அளிப்பா்.
ஒரு சில மனுக்களுக்கு உடனடித் தீா்வும், பிற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். வாரம்தோறும் சராசரியாக 300 முதல் 400 மனுக்கள் பெறப்படும்.
இதில் தனி நபா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் மனுக்கள் அளிக்க வருவா்.
இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தேதி குறித்த அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 மணிக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்டம் நிா்வாகம் அறிவித்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனால், முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி நா.தேவராஜ் கூறியதாவது:
சின்னியம்பாளையம், ஆா்.ஜி.புதூரில் இருந்து வருகிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கிடைக்கவில்லை. உதவித் தொகை தொடா்ந்து வழங்க வலியுறுத்தவும், சக்கர நாற்காலி வழங்கக் கோரியும் மனு அளிக்க வந்தேன்.
இங்கு வந்த பிறகுதான் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மனு அளிக்க முடியாமல் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இதற்காக ரூ.1,000 செலவு செய்து வாடகை காரில் பெற்றோா், உறவினா்கள் ஆகியோரை உதவிக்கு அழைத்து வந்துள்ளதால் அவா்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.