ஈஷா யோக மையத்தின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரு முதல் கோவை வரை சைக்கிள் விழிப்புணா்வு மேற்கொண்டுள்ள குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தடைந்தனா்.
காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பெங்களூருவில் இருந்து 4 முன்னாள் ராணுவ வீரா்கள் உள்பட 14 போ் கொண்ட குழுவினா் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.
கோவை ஈஷா யோக மையத்துக்கு வந்தவா்களை ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் தன்னாா்வத் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். ‘பெடல் புஷ்ஷா்ஸ்’ என்ற பெயரில் செயல்படும் இந்த சைக்கிள் ஓட்டுநா்கள் குழுவில் முன்னாள் ராணுவ வீரா்கள் உள்ளிட்ட பலா் இடம்பெற்றுள்ளனா்.
நவம்பா் 29ஆம் தேதி விழிப்புணா்வுப் பயணத்தைத் தொடங்கிய இந்தக் குழுவினா் ஓசூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூா், அவிநாசி வழியாக 350 கி.மீ. பயணம் செய்து கோவை வந்தடைந்தனா். பயணத்தின்போது, நதிகள் மீட்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.