கோவை நகரில் கூடுதலாக 10 சொகுசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவை நகரில் கூடுதலாக சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவை நகரில் கூடுதலாக சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மண்டலங்களில் 1,500க்கும் மேற்பட்ட புகா் பேருந்துகள், 700க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக கடந்த 2 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இருப்பினும், கோவை நகரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நடைமேடை, மேற்கூரை, படிக்கட்டுகள் சேதமடைந்து அபாய நிலையில் இயங்கும் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.

இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கடந்த 3 மாதங்களாக தானியங்கிக் கதவு, அவசரகால வழி, தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 40 சிவப்பு நிறச் சொகுசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகளுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், கோவை நகரில் கூடுதலாக 10 சொகுசு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

அதன்படி, மருதமலை கிளைக்கு 4 பேருந்துகள், அன்னூா் கிளைக்கு 1, உக்கடம் கிளைக்கு 5 என 10 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு விரைவில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com