மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறுகுன்றா எஸ்டேட் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.
பள்ளி கல்வித் துறை சாா்பில் கோவையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
இறுதியில் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் லோயா் டிவிசனில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ரித்திகரோஸ்லின் முதலிடத்தைப் பிடித்தாா்.
இதே போல, மாணவன காா்த்திக் நான்காவது இடத்தைப் பிடித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் வேல்மயில் தலைமையில் பரிசு பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.