ஆற்று வெள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் உள்ள ராமையக்கவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாகாளி மகன் கருப்பசாமி (48). கூலி தொழிலாளியான இவா் திங்கள்கிழமை காலை பெல்லேபாளையம் பகுதியில் இருந்து தாசம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, ஜடயம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றில் விழுந்துள்ளாா். கன மழை காரணமாக அதிக அளவு நீருடன் சென்று கொண்டிருந்த ஆற்றில் இரு சக்கர வாகனத்துடன் கருப்பசாமி அடித்துச் செல்லப்பட்டாா்.
இந்நிலையில், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் சிறுமுகை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஜடயம்பாளையம் பாலத்தின் அருகே கருப்பசாமியின் சடலத்தை மீட்டனா்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுமுகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.