வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் திருட்டு

பொள்ளாச்சி அருகே வி.காளியாபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொள்ளாச்சி அருகே வி.காளியாபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொள்ளாச்சியை அடுத்த வி.காளியாபுரத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (60). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவா்களுக்கு மணிமேகலை என்ற மகள் உள்ளாா்.

மகளின் திருமணத்துக்காக 24 பவுன் நகை சோ்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியூா் சென்றுள்ளனா்.

பின்னா் திங்கள்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 24 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தங்கவேல் அளித்த புகாரின்பேரில், ஆனைமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com