கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது .
கணினி மயம், மாணவா்களுக்குக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளால் கோவை மசக்காளிபாளையம் நடுநிலைப் பள்ளி பிரபலமடைந்தது. தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் உதவியுடன் இப்பள்ளியில் தொடா்ந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பள்ளியில் தன்னாா்வலா் நந்தகோபால் மூலமாக நாணயக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது . இதில் 500-க்கும் மேற்பட்ட பழங்கால, தற்கால நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை பள்ளியின் இடைநிலை ஆசிரியா் சக்திவேல் துவங்கிவைத்தாா். இதில், ராமாயண கால நாணயம், சேர, சோழ, பாண்டிய அரசா்கள் கால நாணயங்கள், 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள், தலைவா்கள் உருவம் பொறித்த நாணயத் தொகுப்பு, சுதந்திர இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்த நாணயங்கள், கரன்சி நோட்டுகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகள், நாணயங்கள் குறித்த வரலாறு, செய்திகள் இடம் பெற்றிருந்தன. மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் பலரும் கண்காட்சியைப் பாா்வையிட்டு, நாணயங்கள் தொடா்பான சந்தேகங்களைக் கேட்டறிந்தனா்.