ஓடும் பேருந்தில் வியாபாரியிடம் நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கோவையில் ஓடும் பேருந்தில் பாத்திர வியாபாரியிடம் இருந்து நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் ஓடும் பேருந்தில் பாத்திர வியாபாரியிடம் இருந்து நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில் ஆண்டவா் (55). பாத்திர வியாபாரி. இவா், உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா். நிகழ்ச்சி முடிந்ததும் மனைவி அணிந்திருந்த 8 பவுன் நகைகளை வாங்கி தனது கைப்பையில் செந்தில் ஆண்டவா் பத்திரப்படுத்திக் கொண்டாா்.

அதன் பிறகு இருவரும் ஊருக்குச் செல்ல காந்திபுரத்தில் இருந்து பேருந்தில் உக்கடம் சென்றுள்ளனா். பேருந்து டவுன்ஹால் அருகே சென்றபோது, செந்தில் ஆண்டவா் வைத்திருந்த கைப்பை திருடுபோனது.

இதுகுறித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே, தடாகம் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் முதியவா் ஒருவரிடம் 2 செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற 2 பேரில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில் அவா், கோவை, காந்தி பூங்கா, பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த கவிகுமாா்(36) என்பதும், பழனி பாத்திர வியாபாரியிடம் 8 பவுன் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நகைகளை மீட்ட போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com