கற்பகம் மருத்துவமனையில் கருத்தரங்கம்

கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம்

கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சை தொடர்பான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கற்பகம் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஜி. ராஜரத்தினம் மருத்துவமனை டாக்டர் வினோத் ராஜ்குமார், பொன்னம்மாள் துரைசாமி மருத்துவமனை டாக்டர் கௌசல்ராம், கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜேஷ்பாபு, ஆர்தோ ஒன் மருத்துவமனை டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில்  அவசர உதவி, இருதயம், விபத்து, எலும்பு முறிவு ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com