இரு சக்கரவாகனம் மோதி தொழிலாளி சாவு

சூலூர் அருகே இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். 

சூலூர் அருகே இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். 
ஒடிசா மாநிலம், கோவிந்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாபாத்ரா. இவரது மகன் சரோஜ் குமார் (19). இவர் சூலூர் அருகே தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தில் சூலூர் அருகே  திருச்சி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரோஜ்குமார் படுகாயம் அடைந்தார்.  உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
விபத்து குறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com