பொள்ளாச்சி கோட்டத்துக்கு உள்பட்ட 10 புதிய பேருந்துகளை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நகர் மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், அர்பன் வங்கித் தலைவர் விஜயகுமார், தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி கோட்டத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட 10 அரசுப் பேருந்துகளை சட்டப் பேரவைதுணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பொள்ளாச்சியில் இருந்து மதுரை, பழனி, புதுக்கோட்டைக்கு தலா ஒரு பேருந்தும், தேனி, திருப்பூருக்கு தலா 2 பேருந்துகள், சேலத்துக்கு 3 பேருந்துகள் இயக்கப்பட்டன.
உடன் அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ் ராஜா, குருசாமி, சக்திவேல், டி.எல்.சிங், வீராசாமி, வழக்குரைஞர் தனசேகர், நீலகண்டன், அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.