காரமடை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரமடை பேரூராட்சி செயல்அலுவலர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் காரமடை மார்க்கெட், கடைவீதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்த சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
இதில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த 10 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.