கடும் பனிப் பொழிவு காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே பனிப் பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இரவில் குளிர்ந்த காற்றுடன் பனிப் பொழிவு மிகுதியாக உள்ளது. இதனால், தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளதாக தேயிலை விவசாயிகள் தெரிவித்தனர்.