காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

காணும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறையால் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 
இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலம், பூண்டி, ஈஷா யோக மையம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வியாழக்கிழமை அதிக அளவில் காணப்பட்டது. இதில் கோவை குற்றாலத்துக்கு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3450 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். 
கோவை குற்றாலத்துக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்துமிட கட்டணம் உள்பட பல்வேறு வகையில் கட்டணமாக ரூ.2.30 லடசம் வசூலிக்கப்பட்டதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதேபோல கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com