விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அன்னூர் வட்டத்தில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதி உதவியை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்னூர் வட்டத்தில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதி உதவியை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பெரு விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறலாம் என அறிவித்தது.  
 அதைத் தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அன்னூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரு விவசாயிகள் 313 பேர் நிதி உதவி கோரி மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com