வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், ரூ.4.75 லட்சம் திருட்டு

கோவை, ரத்தினபுரி படேல் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (43). மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா. இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வியாழக்கிழமை காலை கடைக்குச் சென்றுள்ளனர். 

கோவை, ரத்தினபுரி படேல் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (43). மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா. இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வியாழக்கிழமை காலை கடைக்குச் சென்றுள்ளனர். 
இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.4.75 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
 இதுகுறித்து கனகராஜ் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ரத்னபுரி போலீஸார், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் வந்து ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com