கோவையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மண்டல அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணி தொடக்க விழா ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலை, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் வசந்த் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படையினர், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர்.