வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 64 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வால்பாறை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் என நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வால்பாறை நீதீபதி கவிதா தலைமையேற்று வழக்குகளை விசாரித்தார். மொத்தம் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 64 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.