கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

மேட்டுப்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் (54). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுப் பகுதி அருகே மகாதேவன் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் மகாதேவன் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகாதேவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com