சட்ட விழிப்புணர்வு முகாம்

வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் நீதித் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வால்பாறை நீதிபதி எஸ்.பி.கவிதா தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.  
வால்பாறை நீதிமன்றத்தில் செயல்படக் கூடிய சட்ட உதவி மையம் பற்றியும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உள்ள சட்டங்கள் குறித்தும் நீதிபதி கவிதா விளக்கி பேசினார்.  வழக்குரைஞர்கள் முத்துசாமி, முருகன், விஸ்வநாதன், சுமதி, சட்டப் பணியாளர் சுரேஷ் உள்பட பலர்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com