மதுக்கரையை அடுத்த எட்டிமடையில் அதிவேகமாக வந்த இரு கார்கள் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.
சேலம் - கொச்சி புறவழிச் சாலையில் எட்டிமடையை நோக்கி இரண்டு கார்கள் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தன. எட்டிமடை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இரு கார்களும், சாலையில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் இரு கார்களும் சேதமடைந்தன. இதில் காரில் வந்தவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.