உடல்நலக் குறைவால் சிறைக் கைதி சாவு

உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி சனிக்கிழமை உயிரிழந்தார்.


உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி சனிக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (58). இவர் திருச்செங்கோட்டில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 இந்நிலையில், மார்ச் 1 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை நிர்வாகத்தினர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். 
இது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com