துடியலூரிலுள்ள இந்திய பட்டயக் கணக்காளர் சங்க கோவை கிளையின் சார்பில் வங்கித் தணிக்கை குறித்த பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்மண்டல பட்டயக் கணக்காளர் சங்கத்தின் செயலர் கே.ஜலபதி தலைமை வகித்தார். இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு சேவைப் பிரிவின் தலைவர் திரஜ்குமார் கண்டவால், உதவித் தலைவர் சரண்ஜாட் சிங் நந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் பி.பாலசுப்பிரமணி வரவேற்றார். கோவை மாவட்ட கனரா வங்கியின் மண்டலத் தலைவர் ஜி.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த அமர்வுகளில் பட்டயக் கணக்காளர்கள் ஆர்.விட்டல்ராஜ், ஏ.மோனி, பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொதுமேலாளர் கே.ஜி.நந்தகோபால் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். எஸ்.பிரபு நன்றி கூறினார்.