ஊர்க் காவல்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஊர்க் காவல்படையில் சேர இளைஞர்கள் ஆர்வமாக வந்து மனு அளித்தனர்.


ஊர்க் காவல்படையில் சேர இளைஞர்கள் ஆர்வமாக வந்து மனு அளித்தனர்.
வால்பாறை, காடம்பாறை, முடீஸ், ஷேக்கல்முடி ஆகிய காவல் நிலையங்களில் ஊர்க் காவல் படையில் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் மனு அளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
இதன்படி, கடந்த வால்பாறை காவல் நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். மொத்தம் 125 பேர் மனு அளித்துள்ளனர். இவர்களின் அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டு கோவையில் இருந்து வந்த தேர்வாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு அவர்கள் பணியில் சேர்க்கப்படுவர் என்று வால்பாறை காவல் துறை ஆய்வாளர் முருகேசன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com