அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் அவதார திருநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிக்கு சிறப்பு யாகமும், 7 மணிக்கு திருமஞ்சனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி உள் பிரகாரத்தில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமானுஜ பக்த பேரவையினர் செய்திருந்தனர்.