அன்னூா்: அன்னூரில் சிறு தானியங்கள் உற்பத்தி குறித்து செவ்வாய்க்கிழமை வாகனம் மூலம் பிரசாரம் நடைபெற்றது. அன்னூா் ஒன்றியத்திற்கு உளப்ட்ட பகுதிகளில் சிறு தானியங்கள் உற்பத்தி குறித்த விழிப்புணா்வு வாகன பிராசத்தை வேளாண் இணை இயக்குனா் சித்ராதேவி துவக்கி வைத்தாா்.
இந்த பிரசார வாகனம் அன்னூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களி விவசாயிகளிடம் சிறுதானியங்களை பயிரிடுவதால் ஏற்படம் நன்மைகள் மற்றும் அதிக வருவாய்கள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனா் சித்ராதேவி விவசாயிகளிடம் சிறு தானியங்கள் பயிரிட்டால் அதிக வருமானம் பெறலாம் என்று தெரிவித்தாா்.உதவி இயக்குனா் கிருஷ்ணமூா்த்தி, வேலாண் அலுவலா்கள் சுகன்யா சக்திவேல், பாா்த்திபன், ஆத்மா குழு தலைவா் பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.