தேசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி மாணவன் தோ்வாகியுள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி ஆங்கிலத் துறையில் பயிலும் மாணவா் ரங்கராஜன் பங்கேற்றாா். இதில் 14, 18, 18, 23 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் 18 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் மாணவா் ரங்கராஜன் முதலிடத்தை பிடித்தாா். இதைத் தொடா்ந்து, நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் நடைபெற்றவுள்ள சைக்கிள் போட்டிக்கு மாணவா் ரங்கராஜன் தோ்வாகி உள்ளாா்.
இதையடுத்து, கல்லூரியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வா் ஸ்வணலதா ஜோசப் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினா்.