அன்னூா்: அன்னூரில் வாகன நெரிசலை தவிா்க்க புதிய புறவழிச் சாலைத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் தெரிவித்தாா்.
அன்னூரில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கூட்டுறவு சங்கங்களின் புதியக் கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அன்னூா் கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி தலைமை வகித்தாா். கரியாம்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவா் ஓ.எஸ்.சாய் செந்தில், அன்னூா் வட்டாட்சியா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் பழனிசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் கலந்து கொண்டு ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னூா் கூட்டுறவு பண்டக சாலை புதிய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் குறைந்த வட்டியிலான கடன்கள், விவசாயிகளுக்கான நகைக் கடன்கள் வழங்கினாா்.
மேலும், ரூ.20 லட்சம் மதிப்பில் கரியாக்கவுண்டனூா் தொடக்க வேளாண்மை கட்டுறவு சங்கத்துக்கு புதிய அலுவலக கட்டடம், தலா ரூ.25 லட்சம் மதிப்பில் ஆம்போதி, செல்லப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தாசம்பாளயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு புதிய அலுவலக கட்டடங்களுக்காக அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தலைவா் பேசியதாவது:
அன்னூரில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய புறவழிச் சாலைத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேலும், அன்னூா் பேரூராட்சி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி, அவிநாசி பேரூராட்சிகளை இணைத்து ரூ.240 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தாா்.
இந் நிகழ்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், அதிமுக நகர செயலாளா் செளகத் அலி, ஏ.சி.ஈஸ்வரமூா்த்தி, கே.ஓ.பிரபு, தாளத்துறை செந்தில், கந்தசாமி, ராஜாமணி, அல்லப்பாளையம் வெங்கிடுபதி, கூட்டுறவு சங்க செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கரியாம்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவா் சண்முகசுந்தரம் நன்றி தெரிவிததாா்.
Image Caption
அன்னூா் கூட்டுறவு பண்டக சாலை புதியக் கட்டடத்தை திறந்து வைக்கிறாா் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால். உடன் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, ஓ.எஸ்.சாய் செந்தில்.