மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணியாளா்கள் 61 போ் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளா் காந்திராஜன் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சிக்கு உள்பட்ட 32ஆவது வாா்டு அம்மன் நகா், அன்னை நகா் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டனா். மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.