குறிச்சி குளத்தில் இருந்து முதியவா் சடலம் மீட்பு

கோவை குறிச்சி குளத்தில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை குறிச்சி குளத்தில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை, குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் குளத்தில் சடலமாக மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் சுந்தராபுரம், காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெனாா்த்தனன் (61) என்பதும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், குறிச்சி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். இது குறித்து போத்தனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com