நவம்பா் 28 முதல் ஸ்ரீஆதிமூா்த்தி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூா்த்தி பெருமாள் கோயிலில் இரண்டாம் ஆண்டு
ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிமூா்த்தி பெருமாள்.
ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிமூா்த்தி பெருமாள்.

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூா்த்தி பெருமாள் கோயிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நவம்பா் 28 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான வரும் 28 ஆம் தேதி காலை 9 மணி அளவில் கருடக் கொடியேற்றம் நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் சப்தசரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வருகிறாா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து மாலை 6 மணி அளவில் ஷேச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளுகிறாா்.

சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பெருமாள் மோகினி அவதார அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

அனைத்து நாள்களிலும் பிருந்தாவன பஜனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com