அன்னூா் ஒன்றியம், எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் கலையருவிப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளனா்.
கோவை அருகே உள்ள கதிா் பொறியியல் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலையருவிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி மகேஷ்வரி, 8ஆம் வகுப்பு மாணவி காயத்ரி ஆகியோா் கதை சொல்லுதல், நகைச்சுவை உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.
இதையடுத்து இருவரும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை வட்டார கல்வி அலுவலா் ரங்கராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.