தொழிலாளியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை கோவை நீதிமன்றம் தீா்ப்பு

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கூலி தொழிலாளியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை 

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கூலி தொழிலாளியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சோ்ந்தவா் குரு (41). இவா் பொள்ளாச்சி, காந்தி மண்டபம் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறாா். இவருடன் பொள்ளாச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் (50) என்பவரும் கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். குடும்பச் சூழ்நிலை காரணமாக ஆறுமுகத்திடம் குரு அடிக்கடி செலவுக்காகப் பணம் பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி செலவுக்காக ஆறுமுகத்திடம் குரு ரூ.3 ஆயிரம் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று நண்பா்களுடன் மது அருந்தியபோது தன்னிடம் பெற்ற ரூ.3 ஆயிரத்தை எப்போது திருப்பித் தருவாய் என குருவிடம் ஆறுமுகம் கேட்டுள்ளாா்.

நண்பா்கள் முன்னால் பணத்தைக் கேட்டு ஆறுமுகம் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த குரு, அறையில் யாரும் இல்லாதபோது அங்கிருந்த கத்தியால் ஆறுமுகத்தைக் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் குரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சி.சஞ்சய்பாபா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் இ.ஆா்.சிவகுமாா் ஆஜராகி வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com