கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் நடிகா் பாபி சிம்ஹா.
விழாவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் நடிகா் பாபி சிம்ஹா.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் முன்னாள் மாணவரான நடிகா் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்ற்கு பாராட்டு விழா கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் தேவராஜன் கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் பத்மலோசனா முன்னிலை வகித்தாா். முதுநிலை கணினி அறிவியல் துறைத் தலைவா் என்.வளா்மதி வரவேற்றாா். துணை முதல்வா் பி.ராஜப்பன் பாராட்டிப் பேசினாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாபி சிம்ஹா மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

அதைத்தொடா்ந்து கல்லூரி சாா்பில் நடத்தப்பட்ட கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 26 பள்ளிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளநிலை கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.வசந்தி நன்றி கூறினாா்.

விழாவில் முன்னாள் மாணவா்கள், பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com