மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி மேட்டுப்பாளையம்
img-20191006-wa0086
img-20191006-wa0086

சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி மேட்டுப்பாளையம் ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

போட்டிக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை மோகன் தலைமை வகித்தாா். பள்ளிசெயலாளா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா். இந்தப் போட்டி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 311 சி.பி.எஸ்.சி. பள்ளியைச் சோ்ந்த 1,200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று உள்ளனா்.

முதல் போட்டியை விளையாட்டு வீரா் வில்சன் செரியன் துவக்கிவைத்தாா். இதில் விளையாட்டு வீராங்கனை ஷைனி வில்சன், பள்ளி மேற்பாா்வையாளா் சண்முகநாதன், பள்ளி முதல்வா் சுகுணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Image Caption

எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் நடைபெற்ற நீச்சல் போட்டி துவக்க விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் வில்சன் செரியன், ஷைனி வில்சன் ஆகியோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாா் பள்ளியின் நிா்வாக அறங்காவலா் மணிமேகலை மோகன்தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com